பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



முதல் முத்தம்

ஆற்று மல்லிகைப் பூவெடுத்து
சூடிக்கொண்ட பொன்வேளையில்
ஏங்கி ஏங்கி இத்தனை மாதங்கள்
வீங்கிய வயிறு
வலிக்க ஆரம்பித்தது.

குண்டு மல்லிகை போல
குண்டாகியிருந்த வயிறைப்
பிடித்தவாறே மெல்ல,
இதயம் கனக்க,
சென்றோம் தேவலோகத்து
வைத்தியசாலை.

எங்கோ இருந்து பறந்து வந்த
காதல் பாடல்களின் முதல்வரி
என் காதுக்குள் பாய்ச்சப்பட்டது
என் நெஞ்சம் துடிக்க ,
வைத்தியச்சி என்னைப் பார்த்ததும்
ஒரு ஈசலைப் போல
மனம் கொண்டுவிட்டேன்..

உற்றவன் துணையின்றி
ஓர் அறையில் , அவனால்
மகரந்தம் பூசி வடிக்கப்பட்ட
என் வயிறைத் தொட்டு,
ஒவ்வொரு அரைவினாடியும்
கடவுளை நினைத்து
பெற்றெடுத்தேன்
பூவுக்கும் பூவுக்கும் பிறந்த
பூவேந்தனை.

மீன்களும் கண்டு
தற்கொலை செய்திடும் கண்கள்
கொண்டவனாய் மிளிர்ந்திட்டான்
பூவேந்தன்.
மான்களும் வெட்கித்
தலைகுனியும் மேனி பெற்றிட்டான்
என் மைந்தன்.

அள்ளி அணைத்து
அவனை சூடுகையில்
குளிர்ந்த நீராய்ப் போனது
அப்போதுவரை கொதித்த மனம்.

அவன் இட்ட முதல் முத்தம்
உணர்வுகளின் பொற்குவியல்
அவனுக்கு நான் இட்ட முதல் உணவு
என் பெண்மைக்கே இலக்கணம்.
விழிகளைத் திறக்காமல் தின்றுவிடுவான்
என் வேதனைகளையும் என் ரத்தத்தையும்
அச்சம், மடம், நாணம், பயிர்பு ஆகிய
மொத்தமும் இழந்து தாய்மை ஆனேன்
அவனுடைய முதல் முத்தத்தில்...

கொய்தது பிச்சி @ 9:02 AM, ,




நிதம் நிதம் கன்னிமுத்தம் கதிரவா!

தளர்ந்து போய் நிற்கிறது
தீண்டலில்லாமல் தூங்கும்
இளந்தளிர் இலைகள்
குலுங்க மறுக்கிறது
குழந்தைகள் பல
பிரசவிக்கும் மரங்கள்

இறந்துபோன கிளைகளின்
உரித்த பட்டைகளும்
ஓணான் ஏறி ஒடிந்த
மரக்கிளைகளும்
உதிர்ந்துவிட துடிக்கிறது

ஒதங்களை ஒதுக்கிவிட்டு
அலைகள் உறங்குகின்றன.
இரைச்சலில் அடங்கிப் போய்
கிடக்கும் மீன்களும்
கண் திறக்க மறுக்கின்றன

அங்கங்கு உருளும்
சண்டமாருதங்கள்
தன் வேலையைக் காணாது
கிடக்கின்றன

ஊரில் உள்ள
ஒட்டு மொத்த நிலவும்
கனவில் தேய்கிறது
இயற்கைப் பேய்கள்
மெளனம் வீசிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு நாளும்
நீ இடும்
முதல் முத்தத்திற்கு
வெட்கப்பட்டு காத்திருக்கிறது
ஒட்டுமொத்த உயிர்களும்..

கொய்தது பிச்சி @ 9:01 AM, ,




உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள்....

தெள்ளத் தெளிவான அலைகடலில்
ஒவ்வொரு மீன்களையும்
நீயும் நானும் எண்ணுவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
அலைகளின் அடுக்குகள்
உனக்கு மட்டும் ஊடுறுவும் தன்மை..

மெல்ல அசைந்தாடும் செதில்களைப்
பிடித்து இந்த அகிலமெங்கும்
வியாபித்திருக்கும் கடலை
உலா வருவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெறும் நிலப்பாறைகள்
உனக்கு மட்டும் அதிசயக் கண்கள்.

இறுதியில் பாறைகளின் மேல்
கோபம் கொள்ளும்
அலைகளின் வழியே
நம் உருவங்களை அடைய இருப்போம்
எனக்குத் தெரிவதெல்லாம் வெறும் சிலைகள்
உனக்கு மட்டும் உயிர்ப்பிக்கும் அதிசயம்..

இருவரும் சிலையாகி அமர்கிறோம் கடற்கரையில்.....

தெறித்தோடுகிற அலைகளிடமிருந்து
காவல்கொள்ளத்தான்
நம்மை உயிருள்ள
சிலையாக வடித்துவிட்டார்களோ?
சுதந்திரமாய் கடலில்
திரிந்து கொண்டிருந்த நம்மை
கடற்கரைக் காவலாகவே
பிடித்துவிட்டார்களோ?

நீ என் வெட்கத்தில் திரும்பி நின்று
காதலோடு பார்ப்பதைக் கண்டு
ஓடி வருகிறதா அலைகள்?
கலைஞனும் மனதைப் பறிகொடுத்து
இதமாக இப்பாறை மேல் நம்மை
இதயமாக வளைத்தானோ சிலைகள்?

நீ தெறிக்கின்ற நீரை உன்
ஆழமான கண்களாலேயே நோண்டுகிறாய்!
துளிகள் பட்டுபட்டே நீ கரைந்துபோவாயோ
என்று அச்சப்பட்டு அலைகளிடம் வேண்டுகிறேன்.

மேன்மையும் பிணியும் மாறி வந்தாலும்
என் பார்வையும் காதலும் மாறாது..
அலைகளின் ஓட்டத்தில் நம்
பிணைப்புகள் என்று போறாது

ஆழியும் அந்தமும் இணைந்து
நம்மை காதலிக்கலாம்..
காதலனே! சொப்பனம் காணாதே!
நம்மை அலைகழித்த அலைநீரை
அந்தி மல்லிகை தந்து வரவேற்போம்
க்ருபை என்று கடலுக்கே!
வருகை என்று நல்வரவே!

கொய்தது பிச்சி @ 8:09 PM, ,




நிந்தித்த உன்னை....

ஈரம் மிகுந்த ஒரு கவிதையின்
வார்த்தைகளை சிதறிவிட்டாய்
அதன் உன்னத பொருள் தெரியாமல்
எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி
பதம் பார்க்கும், என் காதலை
பங்கப்படுத்திய உன்னை.

விழிப்படலங்களின்
விந்தையான சக்தியில்
உன்னை நான் சந்தித்தேன்
உறுதியில்லாமல் உதறிவிட்டாய்
கதிர்களின் பாய்ச்சலை!
வெளிச்சம் தர மறுக்கும் (உனக்கு)
ஒளியின் பிள்ளைகள்.

ஏங்கி ஏங்கி கண்ணீரில்
வீங்கிப் போன இதயத்தை
உனக்காக காண்பித்தும்
கண்கள் கோண
மறுத்துப் போகிறாய்
இரத்த நாளங்கள்
பீய்ச்சி அடிக்கிறது
உன் கோரம் படிந்த முகத்தில்

இதயம் ஏற்ற கணமே
அறியாமல் போனதினால்
இன்று கனமாகப் போகிறது
என் நெஞ்சுக்குள்
உனக்காக" என்று நான் நினைத்த
இதயம்

வெறும் வாலிபத்தை
உபயோகித்த
உன்னை.
வார்த்தைகளால் சாகடிப்பேன்.

அறிந்து கொண்டேன்
உன் அழுகிய கண்களை
இன்றும் இறைவன்
இருப்பதால்தான்
அழுகாமல் இருக்கிறது
என் இதயம்.


கொய்தது பிச்சி @ 9:08 PM, ,




உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள்....

இதயச் சிலைகள் விட்டு கடலில் உலாவி வருகையில்.....

தெள்ளத் தெளிவான அலைகடலில்
ஒவ்வொரு மீன்களையும்
நீயும் நானும் எண்ணுவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
அலைகளின் அடுக்குகள்
உனக்கு மட்டும் ஊடுறுவும் தன்மை..

மெல்ல அசைந்தாடும் செதில்களைப்
பிடித்து இந்த அகிலமெங்கும்
வியாபித்திருக்கும் கடலை
உலா வருவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெறும் நிலப்பாறைகள்
உனக்கு மட்டும் அதிசயக் கண்கள்.

இறுதியில் பாறைகளின் மேல்
கோபம் கொள்ளும்
அலைகளின் வழியே
நம் உருவங்களை அடைய இருப்போம்
எனக்குத் தெரிவதெல்லாம் வெறும் சிலைகள்
உனக்கு மட்டும் உயிர்ப்பிக்கும் அதிசயம்..

இருவரும் சிலையாகி அமர்கிறோம் இங்கே!!!

தெறித்தோடுகிற அலைகளிடமிருந்து
காவல்கொள்ளத்தான்
நம்மை உயிருள்ள
சிலையாக வடித்துவிட்டார்களோ?
சுதந்திரமாய் கடலில்
திரிந்து கொண்டிருந்த நம்மை
கடற்கரைக் காவலாகவே
பிடித்துவிட்டார்களோ?

நீ என் வெட்கத்தில் திரும்பி நின்று
காதலோடு பார்ப்பதைக் கண்டு
ஓடி வருகிறதா அலைகள்?
கலைஞனும் மனதைப் பறிகொடுத்து
இதமாக இப்பாறை மேல் நம்மை
இதயமாக வளைத்தானோ சிலைகள்?

நீ தெறிக்கின்ற நீரை உன்
ஆழமான கண்களாலேயே நோண்டுகிறாய்!
துளிகள் பட்டுபட்டே நீ கரைந்துபோவாயோ
என்று அச்சப்பட்டு அலைகளிடம் வேண்டுகிறேன்.

மேன்மையும் பிணியும் மாறி வந்தாலும்
என் பார்வையும் காதலும் மாறாது..
அலைகளின் ஓட்டத்தில் நம்
பிணைப்புகள் என்று போறாது

ஆழியும் அந்தமும் இணைந்து
நம்மை காதலிக்கலாம்..
காதலனே! சொப்பனம் காணாதே!
நம்மை அலைகழித்த அலைநீரை
அந்தி மல்லிகை தந்து வரவேற்போம்
க்ருபை என்று கடலுக்கே!
வருகை என்று நல்வரவே!

கொய்தது பிச்சி @ 8:18 PM, ,




குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 6

உதிர்வினில் அழுதிடும்
மெல்லிலை மேலே
வெட்கம் பொருள் பாறாது
உமிழ்கிறாய்
உன் தாய் படைத்த வாயிலிருந்து

என்றாவது உதிர்பூக்களின்
விம்மிய மனத்தினைப் பார்த்ததுண்டா ?
உன் சந்தடி பட்டு
பொடியாய்ப் போகும் அவைகளின்
மனவேதனை ஒலியாவது கேட்டதுண்டா?

வாசம் வீசும் ஏலக்காயின்
உட்புற விதைகளை
உன் எச்சில் படுத்தி
எரிமலையின் உலைக்களமாய்
மாற்றிவிட்டாய்
உன் கொட்டம் அடக்கத்தான்
புனைப்பெண்ணாய் மாறினேனோ?

ஈறு பற்களின்
சந்து இடைவெளியில்
ஊறும் புழுக்களைப் போக்குவதில்லை
உன் காமவேட்கை படிந்த விரல்கள்
உள்துழாய்க் குடல்களின்
நாற்றத்தை மீறி
பரிகாசமாய் சிரிக்கிறது
உன் மந்தப்புத்தியுடைய மனது

கீறிய ரணங்களிலிருந்து
ஒரு துளி விழுந்திடினும்
புகைச்சல் ஆரம்பமாகும்
உன் கெட்டுப்போன இதயத்தின்
மேற்புற சவ்வுகளிலிருந்து..........

வீக்க மிகுதியில்
இடும் சாபங்களின் உஷ்ணம்
உன் உடலை எரித்துவிடும்.
உன் கனவை கலைத்துவிட்டு
நித்திரை கொள் புழுவே !
மிடிமை கொண்ட இதயத்திற்கு
என்று பிச்சி
அடிமை கொள்ளமாட்டாள்
பூச்சடங்கிய இதயத்திற்கு
எந்த பெண்ணும் மயங்கமாட்டாள்..

கொய்தது பிச்சி @ 8:14 PM, ,




என் காவியக் காதலன் கண்ணன் 1

லட்சுமி எழுப்பும்
வீணை இசையின்
துளியில், ஒரு அணுவாக
வியாபித்திருக்கும்
நித்தியானந்தன் அவன்!.

உலகோர் செவிகளில்
உள்ளிருக்கும் படலங்களில்
அமர்ந்துகொண்டு
உள் நுழையும் பாடல்களைத்
தணிக்கை செய்யும்
பரம சுந்திரன் அவன்!

ஒளியை மிஞ்சும் வேகத்தில்
கண்களைச் சிமிட்டியும்
இமை முடிகளுக்கு இடைப்பட்ட
இடைவெளியில் நிலைகுலையாமல்
நிற்கும் சுந்திர ரூபன் அவன்!

இறந்துபோன பிக்காசோவை
ஐன்ஸ்டீன் விதிப்படி அழைத்து
சித்திரமாய் தன்னை
வரையச் சொன்ன
நித்தியத் திருமகன் அவன்!

அன்னையின் தாலாட்டில்
ஒவ்வொரு எழுத்துமாய்
நிறைந்து கொண்டு
குழந்தையின் செவிக்குள்
ஊற்றெடுக்கும் நாதசுவரம் அவன்!.

கொக்கரிக்கும் கூட்டத்திற்கு
வெறும் சக்கரத்தைக் காட்டி
குற்றேவல் புரியவைத்து
அவர்களை வெள்ளையாக்கியே
நீலமாய் போனவன் அவன்!

அமரகற்பகம் எனும் ஊருக்குள்
ஆளை அடக்கும் இந்திரனும்
நிந்தனையே என்று நினையாத
நான்முக பிரம்மனும்
நிதமும் தரிக்கும்
திருநாமச் சந்தனம் அவன்!

இத்தனைக்கும் சொந்தக் காரன்
திருநீல வர்ணக்காரன்
சித்திபெற்ற யுத்திக்காரன்
யசோதையின் மைந்தன்
என் கண்களின் துடிப்புகளுக்கு
அடிமையாவது ஏன்?

கொய்தது பிச்சி @ 8:10 PM, ,