பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



மணம் தேடிக் காத்திருக்கும் மங்கை

சைந்திடும் பாடலுக்கு ஏற்ப
வளைந்து நடனமிடும்
பூமித்தாயின் ஓர் மடியில்......
தொட்டு மலரும் பூக்களுண்டு
தொட்டு வெட்கும் இலைகளுண்டு
நான் எந்த வகை?
மெல்லத் திறவும் பூவாக
அதிரங்கள் திறந்து
உதிரும் வார்த்தைகளைப்
பொருக்க வேண்டும்
கவிதைக்காவே!

மெல்லிய கனவுகளோடு
பூப்பெய்திய நாள் முதல்
பூவுக்குள் வெடிச்சத்தம்
நாளூம்
கண்களின் துளிகள்
வருத்தமல்ல; ஆயினும்
பெண்கள் நாங்கள்
துயில் கொள்ள வேண்டுமே
காதலனின் மடி!

தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?
உரலுக்குள் அரைத்த மாவினில்
அரைந்துபோன கண்ணீர்த் துளிகள்
உரசலாலும் விரசலாலும்
நெருப்பாய் மாறிவிடும்.

நெருப்பு அழிவு;
வன்மை, கொடூரம்;
தீபம் அதுவல்ல.

தீபம் வேண்டிக் கேட்கிறேன்
என்றும் தீராத திரவத்துடன்.

கொய்தது பிச்சி @ 6:47 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்