பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 5

எட்டிப் பார்த்த
இரு விழிகளின் நரம்புகள்
என் குத்தல் பார்வையில்
விழி நடுங்கிப் போயின

மரண வேதனை நிகழும்
நெஞ்சாய் உருமாறிக்
கொண்டிருந்த அவன் நெஞ்சில்
துர்நாற்றம் வீசியதைக்
கையால் தடவிப் பார்த்தான்.

ஏந்தெழில் மேனியென் மேனி
போர்த்திய சீரைக்குள்
ஒளிந்திருக்கும்
பூந்தளிர் மனதினை,
நரம்புகளை அம்பாய்க் கோர்த்து
புதைத்திடத்தான் எய்தினான்.

பள்ளியெழுந்த கண்களும்
காணும் தெளிவாக, அவன் பார்வை
துள்ளியெழுந்த இமை முடியும்
தூங்கிவிடும் தாக்குதலில்.
துஷ்டனே என
துர்வாசன் சாபமிட்டாலும்
சிரித்துக்கொண்டுதான் இருப்பான்
புழுக்கள் நெளியும் பற்களோடு..

குடல்பிடுங்கும் வாசனை
நாசியில் ஊற,
மெல்ல எழுந்து வந்து
நெஞ்சைக் கீறிய கைகளால்
தொட்டுப் பேசிட முனைந்தான்.

புழுக்களின் அடுக்கடுக்கான
மேனியும் அழகு என்று
பூச்சிகள் பயணித்திட முடியுமா?

வாயிலிருந்து வெளியேறும்
எச்சில், நூல்களை விட
மெல்லிய இழையென்றாலும்
ஆளையே கொல்லும் விஷமல்லவா?

ரெளத்திரம் கண்களில் ஏற
சிவந்துபோன நரம்புகளின்
வெடிப்பில், நிலைகுலைந்து
நினைவு மலுங்கிப் போனான்.

மின்னலின் தடம் பற்ற
முடியாது யாராலும்
இன்னலின் தடம் பற்றிட
முடியும் யாராலும்.
இவன் வினாடி நேரத்தில் என்னை
அடையப் பார்க்கிறான்
நான் கொட்டிய உதிரத்தை
கண்களில் வீசிடவே பார்க்கிறேன்.

கொய்தது பிச்சி @ 9:19 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்