பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 4

காற்றின் சலனத்தில்
காய்ந்தாடும் வேள்விழியை
கசந்துபோன ரசங்களைக் கொண்டே
கையாடுகிறாய்

சருகுகளின் சந்தடியில்
அவித்துப் போன செவியை
வைத்துக் கொண்டு
புன்னை மரத்து இலைகளின்
துளிர்ப்பாய் ஜீவிதம் கொள்ளூம்
உனக்கு விழிப்படலத்தில்
விழுந்தவைகள் சொர்ணமா?
காட்சிப் பிழையில்லாத வர்ணமா?

நீ காண்வதெல்லாம்
பூவின் கலசம் என்று
அறியும் போது
என் கருவூல இதயம்
கொள்ளைகொள்கிறது..
தோட்டத்துப் பாதையில்
பூஞ்சருகுகள் இருக்கலாம்
சப்பாத்திப் பூக்கள் இருக்கலாமா?
குத்திய வேதனைகள்
வெள்ளை இறகுகளுக்குத் தெரியும்
வர்ண குருதியாக
உன் மனதை மட்டும்
கொடூரமாய் வைத்துக்கொண்டாய்
மறதியாக.....

உன் பாடக் குறிப்புகளில்
a+b = ab என்றும்
என் பாடக் குறிப்புகளில்
a>b என்றுமே
எழுதப்பட்டிருக்கிறது.
உன் குறிப்புகள் தவறா?
என் கணிப்புகள் தவறா?
எட்டிப் பார்க்கும்போது
பார்வைக் கோளாறாக
என்றுமே உனக்குத் தெரிகிறது
a+b = abc
தோண்டிய குறிப்புகளை விடு
அல்லது
விஷமிழந்த கள்ளிச் செடியாக
அழுதிடுவேன் வர்ணமற்ற ரத்தத்தோடு
எண்ணுவதை விடு
நாட்களையும்
என்னையும்.....


கொய்தது பிச்சி @ 6:35 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்