பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 3

 கீழ்நோக்கிய
தென்னங்கீற்றின்
ஓர் காய்ந்துபோன மூலையில்
படர்ந்து கொண்டிருக்கும்
புழுதியினைப் போல்
நெளியாது, வழியாது
உறங்கிக் கொண்டிருக்கிறது
நெஞ்செலும்பில்லாத
ஓர் புழு

மாலைச் சூரியனைத்
தன் ஓரக் கண்ணால் சிமிட்டும்
கீத்துக் கீத்தாக கிழிந்து
அதேசமயம் அழகாய் வடிந்து
இருக்கும் இரு இலைகளின் மேல்
முள் பாதுகாப்பில் விழித்திருக்கும்
ஒரு சிவப்பு நிற மெல்லிதழ்

மெல்லிய இச்சைக் காற்றின்
ஊதலில், நிசப்தமாய்
இயற்கையின் காகிதமான
இதழ்களில் விழுந்து
அலைகிறது; துலாவுகிறது
இந்தப் புழு
எங்காவது தேன் இருக்குமா என்று!

மெல்லிதழ்கள்
புழுக்களின் ஊரலில்
காயமாகாது
காற்றைத் துணைக்கழைத்து
வீழ்த்திவிடும் எண்ணத்தோடு
சிரித்து மகிழ்கிறது
முற்களைச் சூழ்ந்து வைத்திருக்கும்
பல இதழ்களின் தொகுப்பு.

என்றுமே மீண்டும்
எட்டிப் பார்க்க நினைக்கும்
குலைந்துபோன சேற்றின்
உருவங்களை
ஒதுக்கி வைத்து வாழ
நினைக்கும் பூவின் வாசனை

ஒளியில்லா பேதையினை
சீண்டுவது
நெருப்பின் நுனியில்
வேக வைத்த புழுவாய் போகும்

புழுக்களே!
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்காதீர்கள்
உங்களின் கண்கள்
நித்திய சூரியனின் அனலில்
காணாமல் போய்விடும்


கொய்தது பிச்சி @ 10:30 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்