பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 2

சொரிந்து கிடக்கின்றன
வெந்தழலில் கருகப்போகும் பூக்கள்
முழித்துப் பார்த்து சிரிக்கிறதே
தேனுக்குச் சுற்றும் வண்டுகள்

இதே தெருவில்தான்
ரதிமன்மத ஊர்வலம்
கண்டதுகள் இந்த சக்கைகள்.
நர்த்தனம் போட்டு
வரவேற்றதுவும் இவைகளே!!

நெளிந்து வளைந்தாடும்
இலைகளின் நுனியில்
சொட்டாக அமர்ந்து
கனம் ஏற்றும்
தீப்பந்த்ததின் துளிகள்
இவ்விரண்டு உதிர்தலை
கவனிக்காமல் போய்விடுகின்றன
அல்லது தடுப்பணை போடுகின்றன.
வெந்தழல் மெருகினில் பூக்கள்
செம்மையாகத் தெரியலாம்
மாயம் அது.

மீதியின்றி கருகிப் போகும்
பூக்களின் வாசனை நுகருவது
வண்டுகளின் நோக்கமென்றால்
தீந்துளிகளின் தடுப்பணை
தோற்று விடுகிறதே!
இறைவா! விட்டுவிடு
இனி மென்மையாகப் படைப்பதை.

கொய்தது பிச்சி @ 1:53 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்