எனக்கு ஊக்கமளித்த ஈழத்து (கவிஞை) சகோதரியைப் பற்றிய கவிதை.....
அத்திப்பூவின் அடிவயிறைத்
தொட்டுப் பார்த்து
நறுமணத்தின் அந்தரங்கங்களை
அறிந்து கொண்ட வெண்புறா
அவலட்சணத் தாமரையை
அள்ளியெடுத்து தன்
மென்கரங்களில் தொட்டுத் துலாவி
ஸ்பரிசக் காற்றாலே
சொரூபமாக்கும் ஆற்று மல்லிகை!
அவனியெங்கும் அலைந்து திரிந்து
காலவரையறையில் கூட்டுக்குள் நுழைந்து
புதுரகக் குருவியாக, கிடைத்த் இரைகளை
மரத்தில் இரைக்கும் ஈழத்து மண்கொடி
குறிஞ்சிப் புஷ்பத்தின்
புணர்ச்சியை
நெருக்கத்தில் கண்டுவிட்டு
அதன் சூட்சுமத்தை
உலகிற்களித்த பைங்கொடி
வல்லின வார்த்தைகளின்
பொருட்சிதைவைக் கண்டு
இனி மெல்லினமே என்றும்
சிறந்ததாய்க் கவி கொடுக்கும்
அதியற்புத கவிமங்கை
முரித்துவிட்ட அம்புகளின்
சிதறல்களை மூச்சுக்காற்றால்
ஒட்டி வைத்து, சிகையிழையின்
முடிச்சுகளால் கட்டி வைத்த
தேவலோகத்துப் பதுமை!
மேல்நோக்கிய விழிகளைக் காட்டி
மிளகுச்சாற்றின் கசப்புகளை
ருசித்து விட்டு, அது இனிப்பேதான்
என்றுணர்த்திய வீரியஅழகி
எங்கள் காய்ந்த மல்லிகையை
வரிகளாலேயே புதுப்பிக்கிறாய்
ஒடிந்துபோன முல்லையை
தடவித் தடவியே ஒட்டுகிறாய்
பூந்தோட்டத்தில் ஒரு ராணியாக
பூக்களைப் பிரசவிக்கிறாய்
எம் சருகுகளையும்
காலத்தடத்தால் மெய்ப்பிக்கிறாய்
வாழ்க என் சகோதரியே!
உன் வயதை குறிஞ்சுப்பூவாய் நினைத்துக் கொண்டு
ஆயிரம் பூக்கள் மலரக் கண்டு
வாழ்வாயே!!!!
கொய்தது பிச்சி @ 9:11 PM,