பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



கற்சிலைக் காதல்.....

ருத்திர வீணைக் கம்பிகளின்
இறுக்கமான நிலையில்
நெருக்கமாக பாடப்படும்
முகாரி ராகத்தில்
காதல் பாடுகிறது
இதயத்திற்கும் இதயத்திற்கும்
இடையேயான
இன்பப் பாடல்

அகிலமெல்லாம் காற்றாய்
வியாபித்திருக்கும் காதலின் பாடலில்
ஏழு ஸ்வரங்களும்
தனித்தனியே கழன்று ஓடுகிறது
காதலர்கள் எனும் ஊடகத்தில்

ஒவ்வொரு இரவும்
சூரியனின் நயன் மோட்சத்திற்கு
காத்திருப்பதுவாக
காதலின் பாடல் காத்திருக்கிறது
கற்களின் வலிமையாக.....

முகிலெழுப்பிய நுண்ணிய துளிகளின்
சத்தம் கேட்டு
துரித நடவடிக்கையாக
கற்சிலை பாடல்கள்
கலைந்து போகிறது.
பரிபூர்ண மோட்சம்
விழிகளில் தெரிகிறது

அண்டங்களின் பேருடைப்பும்
பிரளய சத்தமும்
பிணைந்து போன கோள்களின்
வெடிப்பும், வெறும்
பிண்டமாகப் போகிறது
பாடல்களின் உச்ச ஸ்துதியில்

நீர் கோத்து நிற்கும்
நெஞ்சங்களுக்கு இமைகளுக்கு
மத்தியில் பொதிந்துவிட்ட
இப்பாடல், சூடேற்றி
வற்றச் செய்யும் நீரூற்றை..

பூங்கா ஓரத்து நிழல்களில்
ஒதுங்கியிருக்கும் புல்களுக்கும்
இசைக்கும் பாடலால்
தைரியமுண்டாகும்
தன் சாதலைத் தேட!

வடித்தவன் கைவிரல்
பொன்விரல்
படித்தவன் கண்ணிமை
காதல்
உயிருள்ள ஜடமாய்
உலாவிக் கொண்டிருக்கும்
உண்மைக் காதலாய்
இருவரின் பாடல்கள்
கற்சிலையாக இங்கே!!

கொய்தது பிச்சி @ 9:22 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்