அவள்
28.2.07
காதல் உணர்வுகளுடன்
காற்றை மெல்ல விழுங்கும்
பூக்களின் ராஜ குமாரி அவள்!
மெல்ல ஒளியிழந்து
சாயம் கலைந்த
சாயுங்கால நிலவுக்கு
பாலூட்டும் அன்னை அவள்!
வலியேதும் இல்லாமல்
புன்னகையும் சிதறாமல்
புற்களின் மேல் நடக்கும்
பூச்சிகளின் ராணி அவள்!
சிதறிய தானியங்களை
கொத்தித் தின்னும்
கோலவிழி மென் குயிலினும்
மென்குரல் கொண்ட
பெண்குயில் அவள்!
பாலைநிலப் பூக்களை
சோலை நிலப் பூக்களாய்
மாற்றி, புத்துணர்ச்சியாய்
காட்சிக்கு காட்சி
விருந்தளிக்கும் ஏந்திழை அவள்!.
நிதம் நிதம் என்னைப் பார்த்து
வெட்கிக் குனிந்து
மண்ணின் மடியில் சரியும்
பூங்குறுநல் பூங்கா அவள்!
மின்னிய மின்னல்களின்
சிதைவில், சிதையாமல்
தோன்றிய
மின்னல்கொடி அவள்!
பிக்காசோ கைகளில்
விசித்திர வண்ணம் பாய
நிழலாய் சிரிக்கும்
சித்திரம் அவள்!
கண்களில் நடனமிடும்
காவியத் தலைவியும்,
கோவலனின் காதலியுமான,
கண்ணகியின் சலங்கை அவள்!.
காதல் இறகுகளாய்ப்
பறந்து, பார்வதியின் கூந்தலில்
சிக்கிச் சிரிக்கும்
புஷ்பவதி அவள்!
அண்டார்டிகா வெப்பத்தில்
அலைந்து திரியும்
குளிர் பறவைகளையும் விட
நயனமான பெண்கரடி அவள்!
நிலத்தில் ஊடுறுவி
அழகுக்கு முளைத்திடும்
மங்கள மஞ்சளிலும்
இணையில்லா வர்ணம் அவள்
தரித்திர வாழ்வினிலும்
என்னைப் பார்த்து வியந்து
சிரித்திடும் அழகு ஓவியம்
அவள்.
அவள் அவள் என்று
அழைத்தது
அன்னையைத் தான்
அவள் எனக்கு என்றும்
அழகிதான்.
கொய்தது பிச்சி @ 9:24 PM,